ரஜினியின் கூலி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ

Spread the love


Last Updated:

கூலி படத்தை மே, ஜூன் அல்லது ஆகஸ்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  

கூலி படத்தில் ரஜினிகாந்த்கூலி படத்தில் ரஜினிகாந்த்
கூலி படத்தில் ரஜினிகாந்த்

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் ‘கூலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

அவருடன் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள திரை உலகின் ஷோபின் சாகிர், ஸ்ருதிஹாசன் படத்தில் இடம்பெற்றுள்ளனர். கேமியோ ரோலில் ஆமீர்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆமீர் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகின.

இந்த நிலையில், ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக 21 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தை மே, ஜூன் அல்லது ஆகஸ்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கம் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க – யூடியூப்பில் 700 மில்லியன் வியூஸ்கள்.. விஜயின் ‘பீஸ்ட்’ பட ‘அரபிக் குத்து’ பாடல் சாதனை!

இதற்கிடையே ‘கூலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ தளம் சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

[]

Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *