மீண்டும் மீண்டும் அதே மாதிரியான கேள்வி? சட்டென முகம்மாறிய ரஜினிகாந்த்

Spread the love


Last Updated:

Actor Rajinikanth | லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

கூலி படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பேங்காக் செல்வதற்கு விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியை கண்டவுடன் ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று ஆரவார கோஷமிட்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பேங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்கள் கூலி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு “70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றும் “வரும் 13-ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரை பேங்காக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை செய்தியாளர் கேட்ட உடன் “அரசியல் தொடர்பான எந்த கேள்வியும் என்னிடம் கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்திற்கு உள்ளே ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று கோஷமிட்டனர். உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ரசிகரை பார்த்து போதும் என்று கூறினார்.

இதனை அடுத்து விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முற்பட்டபோது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

[]

Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *