மாமல்லபுரம் | சர்வதேச காற்றாடி திருவிழா தொடக்கம் | International kite festival begins in Mahabalipuram

Spread the love


மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்தை கடற்​கரைப் பகு​தி​யில் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா தொடங்​கியது. இந்த திரு​விழாவை அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் தொடங்கி வைத்​தனர். தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மற்​றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்​து, 4-வது முறை​யாக நடத்​தும் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா நேற்று மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்​தை​யில் தொடங்​கியது. இத்திருவிழா 4 நாட்​களுக்கு நடக்​கிறது.

இதில், மலேசி​யா, தாய்​லாந்​து, சுவிட்​சர்​லாந்​து, வியட்​நாம் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வில் உள்ள பல்​வேறு நகரங்​களில் காற்​றாடி பறக்க விடு​வ​தில் கைதேர்ந்த வீரர்​கள், வீராங்​க​னை​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் 10 அணி​களாக பிரிந்து காற்​றாடிகளை பறக்க விட்​டனர்.

இதில், அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் பங்​கேற்று காற்​றாடிகளை பறக்க விட்டு தொடங்கி வைத்​தனர். முதல் நாளான நேற்று வானில் பறந்த காற்​றாடிகளை சுற்​றுலாப் பயணி​கள் தங்​களது செல்​போனில் புகைப்​படம் எடுத்து மகிழ்ந்​தனர்.

இத்திருவிழா தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்​ளது. இதில், ஆட்​சி​யர் சினே​கா, எம்​எல்​ஏக்​கள் பாலாஜி, வரலட்​சுமி, திருப்​போரூர் வட்​டாட்​சி​யர் சரவணன், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்சி கழக பொது மேலா​ளர் கவி​தா, மண்டல மேலா​ளர் வெங்​கடேசன், மாமல்​லபுரம் சுற்​றுலா அலு​வலர் சக்​திவேல், தமிழ்​நாடு ஓட்​டல் மேலா​ளர்​ அன்​பு உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *