பொதுமக்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி வங்கிக் கணக்குகள்… மோசடி கும்பல் சிக்கியது எப்படி…? | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

அப்பாவி மக்களின் பெயரில் கடன் வாங்கி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். நூதன மோசடியின் பின்னணி என்ன?

Rapid Read
News18
News18

பொதுமக்களின் பான் கார்டு, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களைப் பெற்று, போலி வங்கிக் கணக்கு துவங்கி, பல கோடி ரூபாய் கடன் பெற்று, நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஒருவரின் பெயரில் கடன் வாங்கி சொகுசாக வாழ்ந்தவர்கள் போலீசில் சிக்கியது எப்படி?அப்பாவி மக்களின் பெயரில் கடன் வாங்கி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். நூதன மோசடியின் பின்னணி என்ன?

சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்கள் சிலர் சேர்ந்து ஒரு புகார் அளித்திருந்தனர். அதில், அவர்களுக்கு தெரியாமல் அவர்களது பெயரில் வங்கி கடன் வாங்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது கடனை கட்டச்சொல்லி, குண்டர்கள் சிலர் வீட்டிற்கு வந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து புகார் அளித்ததன்பேரில் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் SHAYAM HYPER ஃபைனான்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவந்த சாரா என்கிற ஜோஸ்பின் பியூலா சிக்கினார். இவர் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வாங்கி தரப்படும் எனக்கூறி விளம்பரம் செய்துள்ளார். இதனை அறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சாராவை அணுகி வங்கிக் கடன் கேட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் மற்றும் பல்வேறு ஆவணங்களைப் பெற்று வங்கிகளில் கணக்கு துவங்கி அதன் மூலம் கடன் வாங்கி உள்ளார் ஜோஸ்பின் பியூலா. ஆனால், வங்கிக் கடன் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுக்காமல், அவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து செலவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பைக் வீலிங் செய்து வாகன ஓட்டிகளை கதறவிட்ட இளைஞர்கள்…! தக்க பாடம் புகட்டிய போலீசார்…

பொதுமக்களை ஏமாற்றி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் பெயரில் செல்போன் எண்ணை வாங்கி, வங்கி கணக்குடன் இணைத்துவிட்டு, ஓடிபி போன்றவற்றை ஜோஸ்பின் பியூலாவும் அவரது கூட்டாளிகளுமே மேனேஜ் செய்துள்ளனர். இப்படி பலரது பெயர்களில் அவர்களுக்கே தெரியாமல் வங்கிக் கடன் வாங்கி, ஜோஸ்பின் பியூலாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். இப்படி மோசடியாக பெறப்பட்ட பணத்தை வட்டிக்கு விட்டு மேலும் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜோஸ்பின் பியூலா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *