புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவு- களைக்கட்டிய காசிமேடு மார்க்கெட்!

Spread the love


Last Updated:

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்

காசிமேடு காசிமேடு
காசிமேடு

புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் மீன்களை வாங்க ஆர்வம் காட்டிய அசைவபிரியர்களின் கூட்டத்தால் மீன்கள்  விலை சற்றே அதிகரித்தது.

சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காசிமேட்டில் பொதுவாக நள்ளிரவு இரண்டு மணியளவிலே தொடங்கும் விற்பனையில் பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். அசைவ விரத நாட்களடங்கிய புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் பலரும் அசைவத்தை  சாப்பிடுவதை பலரும் தவிர்த்து வந்தனர்.

புரட்டாசி தொடங்கியதில் இருந்து  கடந்த சில வாரங்களாகவே காசிமேட்டில் மீன்களின் விலையானது குறைந்த விலையிலேயே காணப்பட்டு வந்தது.

இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி முடியவிருக்கும் நிலையில் புரட்டாசியின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று மீன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மீன்களின் விலைப்பட்டியல்

வஞ்சிரம் கிலோ 850
வவ்வா 650
நாயாறல் 600
பெரிய சங்கரா 600
கடம்பா 550
இறால் 500

சராசரியாக கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 100 முதல் 150 வரை விலை அதிகரித்துள்ளது.

செய்தியாளர் : அசோக் குமார்



Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *