அதிகமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. 4 நாட்களில் 3 கொலை… சிவகாசியில் பரபரப்பு | Breaking and Live Updates

Spread the love


Last Updated:

சிவகங்கையில் கடந்த நான்கு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், கணேசன் படுகொலை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த திருப்பாச்சேத்தி காவலர் ராஜா ஒருமையில் வசைபாடியுள்ளார்.

Rapid Read
News18News18
News18

சிவகங்கை அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் அதே கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அதிமுக கிளைச்செயலாளராகவும் பதவி வகித்தார். இவர் இன்று அதிகாலை தனது கடையை திறக்க வரும்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கணேசனை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கணேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணேசனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

சிவகங்கையில் கடந்த நான்கு நாட்களில் மூன்று கொலைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், கணேசன் படுகொலை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த திருப்பாச்சேத்தி காவலர் ராஜா ஒருமையில் வசைபாடியுள்ளார்.

இதையடுத்து, காவலர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *